tamilnadu

img

ஏலம் எடுப்பவர்களே கடன் சுமையை தீர்மானிக்கலாம்... ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை வாங்குவோருக்கு மோடி அரசு வழங்கும் தீபாவளி ஆஃபர்...

புதுதில்லி:
‘ஏர் இந்தியா’வின் 100 சதவிகிதஅரசுப் பங்குகளையும், ‘ஏர் இந்தியா’வுக்கு, ‘ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ்’ நிறுவனத்தில், இருக்கும் 100 சதவிகித பங்குகளையும், ‘ஏர் இந்தியா -சேட்ஸ்’ (Singapore Airport Terminal Services - SATS)நிறுவனத்தில் இருக்கும் 50 சதவிகிதபங்குகளையும் விற்பனை செய்வதென மத்திய பாஜக அரசு கடந்த ஜனவரி மாதம் முடிவு செய்தது.இந்த விற்பனையை மார்ச் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்ககாலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட் டது. ஆனால், கொரோனா தொற்றுப்
பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

எனினும் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை வாங்குபவர்கள் அதன் கடனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றதால், நட்டப்படுவதற்கு நாங் கள் யாரும் தயாரில்லை என்று தனியார் முதலாளிகள் பலரும் ஒதுங்கிக்கொண்டனர்.முன்னதாக, 2017-ஆம் ஆண்டில்‘ஏர் இந்தியா’வின் முதல் ரிஇன்வெஸ்மெண்ட் முயற்சியின் போதே,தனியார் கார்ப்பரேட்டுகள், கடன்சுமை விவகாரத்தை எழுப்பியிருந்தனர்.இதனால், 2020 ஜனவரி 27 அன்றுஏர் இந்தியாவின் பங்குகளை விற்கும் தனது இரண்டாவது முயற்சியைத் தொடங்கும்போதே, ரூ. 23 ஆயிரத்து 286 கோடியே 50 லட்சம்விற்பனையுடன் தொகுக்கப்பட வேண்டிய நீண்ட காலக் கடன்களைமத்திய அரசு முடக்கியது. இதற்கு அடுத்தபடியாக, தற் போது, ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்தை, ஏலம் எடுக்க விரும்பும் தனியார் நிறுவனங்களே, ஏற்க விரும் பும் கடன் அளவை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற புதிய சலுகை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில், முக்கிய அமைச்சர்களைக் கொண்டகுழு நீண்ட விவாதம் நடத்தி இந்த முடிவை- அதாவது, எந்தவொரு முன் முடிவு செய்யப்பட்ட கடன் தொகை அல்லாத ஏல அளவை சமர்ப்பிக்கலாம் என்பதை மேற் கொண்டதாக கூறப்படுகிறது.

‘ஏர் இந்தியா’வின் வட்டி வெளிப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியையும் அக்டோபர் 30 முதல் டிசம்பர் 14 வரை, அரசாங்கம் நீட்டித்துள்ளது.கடனை எந்த அளவில் நிர்ணயித்தாலும் கூட, அது ஏலதாரர்களின் எண்ணிக்கையை குறைத்து, அவர்களைப் போட்டியிலிருந்து விரட்டியடித்து விடும் என்று சிவில் விமானபோக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இதற்கு காரணம் கூறியுள்ளார்.இவ்வளவு சலுகை வழங்கியும் ‘ஏர் இந்தியா’வை விற்க முடியவில்லை என்றால், நிலைமை சீராகும் வரை, ‘ஏர் இந்தியா’வை தனியார்மயமாக்காமல், ‘ஏர் இந்தியா’வின் அனைத்து வர்த்தக செயல் களையும் முடக்கி வைத்து விடுவதுகுறித்தும், அமித்ஷா தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.2020 - 21 நிதியாண்டிற்கான மத் திய பட்ஜெட் தாக்கலின் போது, பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு இருக்கும் பங்குகளை  விற்பனை செய்வதன் மூலம் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி திரட்டப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.இதில், ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மற்றும் ஐடிபிஐ (IDBI) வங்கி ஆகியவற்றின் பங்கு விற் பனை மூலம் ரூ. 90 ஆயிரம் கோடியை திரட்டுவதும், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் லிமிடெட்(BPCL), கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (CONCOR), ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந் தியா’ (SCI) மற்றும் ‘ஏர் இந் தியா’ உள்ளிட்டவற்றின் பங்கு விற்பனை மூலம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடியைத் திரட்டுவதும் மத்திய அரசின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.