tamilnadu

img

நாட்டின் மிகச்சிறந்த பல்கலை.யாக ஜாமியா மிலியா தேர்வு!

புதுதில்லி:
2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சகம் தற் போது வெளியிட்டுள்ளது.

இதில், தில்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் நாட்டின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக வந்துள்ளது. 90 சதவிகித மதிப் பெண்களுடன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.யுஜி, பிஜி, பிஎச்டி மற்றும்எம்பில் படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கை பெறும் மாணவர் எண்ணிக்கை, மாணவியரின் விகிதம், பாலின சமத்துவம், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுடனான இணக் கம், மாணவ - மாணவியரின் பன்முகத்தன்மை என பல பிரிவுகளில் ஜாமியா மிலியா பல் கலை. சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.இதற்கு முன்பு வெளியான தேசிய கல்வி நிலையத் தரவரிசை பட்டியலில், ஜாமியா மிலியா பல்கலை. 12 ஆம் இடத்தில் இருந்தது. ஆனால், ஒரே பாய்ச்சலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மதப்பாகுபாட்டுடன் கூடிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்தடிசம்பர் மாதம் அமைதி வழிபோராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது, தில்லி காவல்துறையினரும், சங்-பரிவார குண்டர்களும் பல்கலைக்கழகத் திற்கு உள்ளேயே புகுந்து வன் முறை வெறியாட்டம் நடத்தினர். பல்கலைக்கழக கட்டடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். மாணவ- மாணவியரைக் கைதுசெய்துசிறையில் அடைத்ததுடன், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் தீவிரவாதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது, மத்திய ஆட்சியாளர்களே பகிரங்கமாக குற்றம் சாட்டினர். அந்தப் பல்கலைக்கழகம்தான் தற்போது முதல் இடத்தில் வந்துள்ளது.அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் 83 சதவிகித மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், தில்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம் 82 சதவிகித மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும், உ.பி.யிலுள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 78 சதவிகித மதிப்பெண்களுடன் நான்காம் இடத் தையும் பெற்றுள்ளன.

;