tamilnadu

img

ஆக. 1 முதல் பல்கலை., கல்லூரிகள் திறப்பு

 புதுதில்லி,மே 5-  ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  இந்தியாவில்  தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  கொரோனா நோய்  கட்டுக்குள் வராததால், கல்வி நிலையங்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள்,  பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது.  இந்த நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கும் என்றும் கூறினார். 

;