புதுதில்லி:
வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் செப்டம்பர் 19 அன்று நிறைவேறியது. மேலும் கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஒத்திவைப்பதற்கான திருத்தம் கொண்டுவரப்பட்டது.மார்ச் 25 ஆம் தேதிக்கு முன்புவரை கடன் வாங்கி செலுத்தா தவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று வங்கி திவால் சட்ட திருத்த மசோதா குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
முன்னதாக வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் தொழில் நிறுவனங்ககளின் சூழ்நிலையை கருத்தில்கொண்டு வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டம் 2020-ல் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டம்தொடர்பான சட்டத் திருத்தமசோதாவை மாநிலங்களவை யில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதங்கள் அல்லதுஅதற்கும் மேல் நீட்டிக்கப்படும் வரை இந்த காலகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது தற்காலிகமாக இந்த மசோதா மூலம் நடவடிக்கை
எடுக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.