tamilnadu

img

ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தலித் திருமணத்திற்கு தடை.... சிபிஎம் நூலகத்தில் திருமணம் நடைபெற்றது

கோழிக்கோடு:
ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரின் திருமணத்தை நடத்தக் கூடாது என்றுஎதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூலகத்தில் திருமணம் நடைபெற்றது.   

கேரள மாநிலம் கோழிக்கோடு பலுசேரி கூமுல்லி திருக்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது மகாவிஷ்ணு கோவில். பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரனின் வீட்டுக்கு அருகில் உள்ள இந்த கோயிலில் பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்தவரின் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலையிட்டு கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் நூலகத்தை திருமணக்கூடமாக மாற்றி அந்த ஏழைக்குடும்பத்துக்கு உதவியது. 

;