tamilnadu

img

குஜராத் நிறுவனத்திடம் விடப்பட்ட நாடாளுமன்ற கட்டட வடிவமைப்பு

புதுதில்லி:
அனைத்துத் துறை அலுவலகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் வகையில், நாடாளுமன்ற கட்டடத்தைப் புனரமைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அதற்கான வடிவமைப்பு பணிகளை, குஜராத்தின் எச்.சி.பி. (HCP Design, Planning and Management Pvt. Ltd.) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.இந்த காண்ட்ராக்ட் ரூ. 229 கோடி மதிப்பிலானது  ஆகும்நாடாளுமன்ற கட்டட புனரமைப்பு திட்டத்தை வடிவமைப்பதற்காக, மத்திய பொதுப்பணித் துறை, கடந்த அக்டோபர் 2-ஆம்தேதி ஒப்பந்தப் புள்ளிகளை அறிவித்திருந்த நிலையில், 24 நிறுவனங்கள் வரை போட்டியில் கலந்துகொண்டதாகவும், இதில் குஜராத்தின் எச்.சி.பி. நிறுவனம் தேர்ந்துஎடுக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் அர்தீப்சிங் பூரி கூறியுள்ளார். ஹஷ்முக் சி. படேல் என்பவருக்குச் சொந்தமான இந்த நிறுவனம், இதற்கு முன்பு, கொல்கத்தாஈடன் கார்டன் விளையாட்டரங்கம், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையின் புனரமைப்புப் பணிகளை மேற் கொண்ட அனுபவம் கொண்டது என்று கூறியுள்ள அமைச்சர், எச்.சி.பி. நிறுவனம் கோரியுள்ள ஒப்பந்தப் புள்ளி, அரசாங்க மதிப்பீட்டை விட 40 சதவிகிதம் குறைவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.மேலும், “புதிய தோற்றத்திற் காக பாரம்பரியக் கட்டடங்களில் மாற்றங்கள் செய்யப்படாது” என்று கூறியுள்ள அமைச்சர் அர்தீப் சிங் பூரி, “இந்த புனரமைப்பு 250 ஆண்டுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் நடக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.எச்.சி.பி. நிறுவனம் நாடாளுமன்ற புனரமைப்பு பணிகளுக் கான முதன்மைத் திட்டத்தை வடிவமைக்க உள்ள நிலையில், ரூ. 229 கோடியே 75 லட்சம் அந்த நிறுவனத்திற்கு ஆலோசனைக் கட்டணமாக வழங்கப்பட உள்ளது.