ராமநகரம்:
கர்நாடகா மாநிலத்தில் தலித்இளைஞரை காதலித்த மகளை, அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரேகொன்று புதைத்த கொடூரம் நடந் துள்ளது.
ராமநகரா மாவட்டம், மகதி தாலுகாவில் உள்ள பெட்டடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா. 19 வயதான இவர், பி.காம். படித்து வந் தார்.இந்நிலையில், ஹேமலதாவைக் காணவில்லை என்று அக்டோபர் 9 அன்று, அவரது தந்தை கிருஷ் ணப்பா காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளார். போலீசாரும் புகாரின்பேரில், விசாரணையைத் துவங்கியுள்ளனர்.ஆனால், கிருஷ்ணப்பா புகார்அளித்த அடுத்த நாளே, இளம்பெண்ஹேமலதாவின் உடல் கிருஷ்ணப்பாவின் சகோதரருக்கு சொந்தமான பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.போலீஸ் விசாரணையின்போது, தங்கள் மகள் ஹேமலதாவை, அந்த ஊரைச் சேர்ந்த தலித் இளைஞர் புனீத்தும் அவரது நண்பர்களும் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துவிட்டதாக கிருஷ்ணப்பா பழிபோட்டுள்ளார்.ஆனால் ஓக்கலிகா சாதியைச் சேர்ந்த இளம்பெண் ஹேமலதா, தலித் இளைஞரான புனீத்தை காதலித்து வந்ததாகவும், இதனை சகித்துக் கொள்ள முடியாத ஹேமலதாவின் தந்தை கிருஷ்ணப்பாதான் சாதி கௌரவத்திற்காக, தான்பெற்ற மகளையே, உறவினர்களுடன் சேர்ந்து கொன்று புதைத்துள் ளார் என்பது அடுத்தடுத்து விசாரணையில் தற்போது அம்பலமாகி உள்ளது.
ஹேமலதாவின் மரணத்திற்காக அவரது பெற்றோர் துக்கப்படுவதாகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி, அவர் காணாமல் போன 24 மணி நேரம் கழித்தே அவரது தந்தை புகார்அளித்திருந்தார். இவை சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும், அதைத்தொடர்ந்தே ஹேமலதா சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தாங்கள் கண்டறிந்ததாகவும் ராமநகரா எஸ்.பி கிரிஷ் தெரிவித் துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 21 பேர் கொண்ட தனிப்படை ஒன்றை அமைத்துள்ள போலீசார், ஹேமலதாவின் தந்தை உட்பட 3 பேரை கைதும் செய்துள்ளனர்.