தில்லியின் வடகிழக்குப் பகுதியில் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் நடத்திய கொடிய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.