tamilnadu

img

லடாக்கில் சிக்கிய தமிழக லாரிகள் திரும்ப அனுமதி

லடாக், டிச.24-  கடும் பனிப்பொழிவால் லடாக்கில் சிக்கிக்கொண்ட 450 தமிழக லாரிகள் சொந்த ஊருக்கு பத்திரமாக திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. நவம்பர் 30 அன்று நாமக்கல், சேலம் மற்றும் தமிழகத்தின் மற்ற இடங்களில் இருந்து ஸ்ரீநக ரில் உள்ள சோபியான் நகருக்கு சென்ற சரக்கு லாரிகள், ஆப்பிள் லோடுகளை ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தன. அப் போது கடும் பனிப்பொழிவால் லடாக் அருகே லோகமண்டா என் னும் இடத்தில் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் சுற்றுலா வாகனங்களை மட்டும் அனுமதித்துவிட்டு கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த 18 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளை தமிழ கம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். முதல் கட்ட மாக 50 லாரிகள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.