பேரா.ஜெயதி கோஷ்
மும்பை, பிப்.5 - பட்ஜெட்டில் கூறியுள்ள அனைத்து எண்களுமே பொய்யானவை என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பொரு ளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ் கூறியுள்ளார். மும்பையில், ‘மும்பை கலெக்டிவ்’ அமைப் பின் சார்பில், இந்தியப் பொருளாதாரம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கங்களில் பங்கேற்று அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது: தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் 1991இல் இருந்ததை விட, 2008இல் இருந்ததைவிட மோசமான தாகும். இந்நிலையில் தற்போது சமர்ப்பிக்கப் பட்டுள்ள பட்ஜெட்டில், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய அனைத்துத் துறை களிலும் நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டி ருக்கின்றன. வேளாண்மை, வேலைவாய்ப்பு உத்தரவாதம், உணவு, சுகாதாரம், கல்வி என வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய அனைத்துத் துறைகளிலுமே ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இவை, நிலைமை களை மேலும் மோசமாக்கிடவே இட்டுச் செல்லும்.
பட்ஜெட்டில் கூறியுள்ள அனைத்து எண்களுமே பொய்யானவை. ரசீதுகள் தொடர்பாகக் கூறியுள்ள விவரங்கள், திருத்திய மதிப்பீட்டில் இந்த ஆண்டு செலவு செய்ததாகக் கூறியுள்ள விவரங்கள், அதைப்போல் இந்த ஆண்டு அரசுக்கு வரவு வந்ததாகக் கூறியிருக்கும் விவரங்கள் என அனைத்துமே பொய் மூட்டைகளாகும். இவர்கள் இந்த பட்ஜெட்டை ஒரு மாதம் முன்கூட்டியே தாக்கல் செய்திருக்கிறார்கள். நிதி ஆண்டு மார்ச் இறுதியில்தான் முடி கிறது. நமக்கு டிசம்பர் இறுதி வரையிலுமான தரவுகள் மட்டுமே பெற்றிருக்கிறோம். எனவே அடுத்து மூன்று மாதங்களுக்கு என்ன நடக்கும் என்று ஓர் ஊகத்தின் அடிப்படையில் மதிப்பிட்டிருக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டுதான் அவர்கள் பொய் மூட்டை களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு ஜெயதி கோஷ் கூறினார். இக்கருத்தரங்கத்திற்கு மும்பை பல்கலைக்கழக பொருளாதாரத்துறை முன்னாள் இயக்குநர் ரித்து தேவன் தலைமை வகித்தார். அவர் பேசும்போது, “இந்த பட்ஜெட்டானது தலித்துகள்/பழங்குடி யினர் சம்பந்தமாக அளிக்கப்பட்டுவந்த பட்ட தாரிகளுக்கான அனைத்து ஆதரவு ஊதியத் திட்டங்களையும் (ஃபெல்லோ ஷிப்ஸ்) ரத்துசெய்துவிட்டது. இதன் உண்மை யான பொருள் என்னவென்றால், இந்த பட்ஜெட் சாதி அடிப்படையில் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்பதாகும். இப்பட்ஜெட் டில் தரவுகள் முழுமையாக இல்லாததால், இதன்மீது பொருளாதார நிபுணர்கள் செயல் படுவது சிரமம். இவர்கள் உண்மையான தரவுகள் அடிப்படையில் பட்ஜெட்டைத் தயாரிக்காமல், விக்கிபீடியாவில் வந்துள்ள தரவுகளை வைத்து பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தயார் செய்திருக்கிறார்கள்,” என்று சாடினார். (ந.நி.)