புதுதில்லி:
50 பைசா முதல் ரூ. 10 வரையிலான அனைத்து நாணயங்களும் செல்லும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த நாணயங்கள் செல்லாது என்று பரப்பப்படும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். அனைத்து வங்கிகளும் அனைத்து நாணயங்களையும் பணப் பரிவர்த்தனையின் போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.