tamilnadu

img

உதயமானது அகில இந்திய விவசாயிகள் சங்கம் - ப.முருகன்

விவசாயிகள் நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளனர். எனவே அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கணக்கில் கொள்ளாத எந்த அரசியல், பொருளாதாரத்  திட்டமும், தேசியத் திட்டம் என்று  கனவில் கூட கூற இயலாது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின்  நிறுவக தலைவர்களான சிங்காரவேலர், முசாபர் அகமது போன்றவர்கள் ஆரம்பக்காலத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் அமைப்பு அல்லது கட்சி என்ற பெயரில் புதிய அமைப்புகளை ஏற்படுத்தினார்கள். ஏனெனில் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆவர். எனவே அவர்களை அணிதிரட்டுவதில் கம்யூனிஸ்ட்டுகளின் பணி இன்றியமையாததானது. 

கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், எழுத்தாளர்கள் -கலைஞர்கள் என பல்வேறு பகுதியினருக்கும் தனித்தனி அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டனர். அந்த வகையிலேயே அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், அகில இந்திய கிஸான் காங்கிரஸ், அகில இந்திய மாணவர் காங்கிரஸ், இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக சங்கம் ஆகியவற்றை உருவாக்கினர்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின்  நிறுவக தலைவர்களான சிங்காரவேலர், முசாபர் அகமது போன்றவர்கள் ஆரம்பக்காலத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் அமைப்பு அல்லது கட்சி என்ற பெயரில் புதிய அமைப்புகளை ஏற்படுத்தினார்கள். ஏனெனில் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆவர். எனவே அவர்களை அணிதிரட்டுவதில் கம்யூனிஸ்ட்டுகளின் பணி இன்றியமையாததானது. 

கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், எழுத்தாளர்கள் -கலைஞர்கள் என பல்வேறு பகுதியினருக்கும் தனித்தனி அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டனர். அந்த வகையிலேயே அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், அகில இந்திய கிஸான் காங்கிரஸ், அகில இந்திய மாணவர் காங்கிரஸ், இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக சங்கம் ஆகியவற்றை உருவாக்கினர்.

இந்த சங்கத்தின் நோக்கங்களாக,

  •     பொருளாதார ஒடுக்குமுறையிலிருந்து முழு விடுதலை பெறுவது
  •     விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் முழுமையான பொருளாதார அரசியல் அதிகாரம் வழங்குவது
  •     சுரண்டப்படும் அனைத்துப் பிரிவினருக்கும் விடுதலை பெறுவது 

               - ஆகியவையே பிரகடனப்படுத்தப்பட்டன.
மேலும் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜமீன்தாரி, முறை மற்றும் அனைத்து வகைப்பட்ட நிலப்பிரபுத்துவ முறைகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று கோரியது. விவசாயிகளுக்கு நிலத்தின் மீதான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது.
 

விவசாய வாரம்(குத்தகை), விவசாயப் பொருட்களுக்கான சந்தை, விவசாயிகள் கடன், தரிசு நிலம் மற்றும் மேய்ச்சல் நிலங்களை பஞ்சாயத்துகள் வசம் ஒப்படைத்தல், விவசாயத் தொழிலாளிகளுக்கு குறைந்தபட்சக் கூலி போன்றவை குறித்தும் அந்தத் தீர்மானம் பேசியது.

இந்த மாநாட்டின் நிகழ்வுகள் பற்றி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“1930களில் வர்க்க ரீதியாக விவசாயிகளைத் திரட்ட வேண்டியதன் அவசியத்தை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் உணர்ந்தனர். நிலப்பிரபுத்துவத்தை எதிர்ப்பதன் மூலமும், அவர்களின் உடனடி கோரிக்கைகளுக்காக போராடுவதன் மூலமும், விவசாயிகளை தேச விடுதலை போராட்டத்தில் பங்குபெறச் செய்ய இயலுமென அவர்கள் அறிந்தனர். அரசியல் விடுதலைக்கான போராட்டம் என்பதை நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்கின்ற, புரட்சிகரமாக கிராம சமுதாய கட்டமைப்பை மாற்றுகின்ற போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க இயலாதது என உணர்ந்தனர். இடதுசாரிக் காங்கிரஸ் காரர்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை தோற்றுவிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.”

1936 ஏப்ரல் 11 லக்னோவில் நடைபெற்ற சங்கத்தின் துவக்க நிகழ்வுக்கு முன்பாக மீரட் நகரில் தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னரே அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது. மீரட் கூட்டத்தில் சங்கத்தின் திட்டம் ஸ்தாபன, உறுப்பினர்களை தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைப்பதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை மாற்றும் போராட்டத்தை அதன் ஒரு பகுதியாக ஆக்க திட்டமிடப்பட்டது. ஏனெனில் ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு அரசு ஆதரவை அளிக்க உதவியது.
1936 ஏப்ரல் 11 கூட்டம் நடைபெற்ற போது இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் இயக்கத்தை தேச விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக முன்னிறுத்துவதற்காகவே அந்த சமயத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெறும் காலங்களில் தொடர்புடைய பல மாநாடுகளும் கூட்டமும் நடைபெறுவது வழக்கம்.
விவசாயிகள் சங்கத்தின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பின்னாளில் காங்கிரசில் பிரபலமாக இருந்தவர்களாவர். ஜோகன்சிங் ஜோஷ், லால்பகதூர் சாஸ்திரி, கே.டி.மாளவியா, மோகன்லால் கௌதம், பி.சம்பூர்ணானந்த், ஜெயப்பிரகாஷ் நாராயணன், சுவாமி சகஜானந்த சரஸ்வதி, நாபா, கிருஷ்ணசவுத்ரி, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,  தினகர்மேத்தா, கமல்சர்க்கார், ஹரிகிருஷ்ணமகதாப், என்.ஜி.ரங்கா, இந்துலால் யக்னிக், விஷ்ணுராம் மேதி, சரத்சின்கா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் பலரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களாக , பொதுச் செயலாளர்களாக, மாநில அமைப்புகளில் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் பின்னாட்களில் பொறுப்பு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் சங்கம் துவக்கம் முதல் கொண்டே ஒரு பரந்துவிரிந்த அமைப்பாக விளங்கியது. பல்வேறு அரசியல் கருத்தோட்டங்களை கொண்டிருந்தவர்களையும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகள் சங்கம் தன்வசம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1936 ஆகஸ்ட் மாதத்தில் மும்பை நகரில் கூடிய மத்திய கிஸான் கவுன்சில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பற்றி பின்வருமாறு விளக்கியது:
விவசாயிகள் நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளனர். எனவே அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கணக்கில் கொள்ளாத எந்த அரசியல், பொருளாதாரத்  திட்டமும், தேசியத் திட்டம் என்று கனவில் கூட கூற இயலாது. இந்திய தேசிய காங்கிரஸ் தனது அரசியல் பொருளாதார கொள்கைகளில் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் கொள்கைகளை உருவாக்க வேண்டும். விவசாய இயக்கம், தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்தவை.