காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 10 பேர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய பசுமை அமைப்பு சுற்றுச்சூழல் தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரி பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். பலர் நோய்வாய்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை இந்த வகை சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சித் தகவல் கூறப்பட்டுள்ளது. 9 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு சுற்றுச்சூழல் மாசுவினால் குறை பிரசவம் ஏற்பட்டுள்ளது.
காற்று மாசு அதிக அளவில் ஆஸ்துமா நோயாளிகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளை ஆஸ்துமா தாக்குகிறது. சுமார் 12 லட்சத்து 85 ஆயிரம் குழந்தைகள் ஆஸ்துமாவோடு வாழ்கிறார்கள்
மேலும் பல்வேறு நோய்களையும் அவை உருவாக்குகின்றன. பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் உட்பட பல நோய்கள் இந்த காற்று மாசால் ஏற்படுகிறது. உலக அளவில் பார்க்கும் போது காற்று மாசு காரணமாக 2.9 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படுகிறது. இது, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாகும்.
இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.