tamilnadu

img

ஆளுநரை ஏமாற்ற முயன்ற விமானப்படை அதிகாரி கைது

புதுதில்லி,ஜன.11- தனக்கு வேண்டப்பட்டவருக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை வழங்குவதற்கு ,உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவதாகக் கூறி, மத்திய பிரதேச ஆளுநரை ஏமாற்ற முயன்ற  விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். தில்லியில் விமானப்படை விங் கமாண்டராக இருப்பவர் குல்தீப் வகேலா. இவரது  போபாலைச் சேர்ந்த  நண்பரும், மருத்துவருமான சந்திரேஷ் குமார் சுக்லா என்பவர், ஜபல்பூர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்து முதல் கட்டத் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விங் கமாண்டர்  குல்தீப் வகேலா, அமித் ஷா பேசுவதாகவும் துணைவேந்தர் பதவியை சந்திரேஷ் குமார் சுக்லாவுக்கு வழங்குமாறும் உத்தர விட்டுள்ளார். ஆளுநருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் விமானப்படை அதிகாரி மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர்.

;