தில்லியில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
தில்லியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சந்தைகளில் சமூக இடைவெளி இல்லாமல் செல்கின்றனர். இந்நிலையில் கொரோனாவின் மூன்றாம் அலை துவங்கி உள்ளது என தில்லி முதல்வர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தில்லியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என எய்ம்ஸ் இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து அவர் கூறியதாவது
தில்லியில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதால் வேகமாக பரவி வருகிறது. இந்த பரவலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.