tamilnadu

img

கொரோனா அபாயப் பகுதியாக மாறும் ஆக்ரா நகரம் 

ஆக்ரா 
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் உள்ளது. இங்கு உலகம் முழுவதும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் நாட்டின் சுற்றுலா நகராக உள்ளது. 

இந்த ஆக்ரா நகர் தற்போது கொரோனா பிடியில் சிக்கி தவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 30-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா அபாய பகுதியாக ஆக்ரா மாறியுள்ளது. இதுவரை அங்கு 142 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஆக்ராவில் உள்ள 49 இடங்கள் கொரோனா பரவும் அபாயம் மிகுந்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
 

;