tamilnadu

img

போதைக்கு அடிமையான  25 ஆயிரம் பள்ளி குழந்தைகள்

புதுதில்லி:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் எம்.பி.யான டி.சுப்பராமி ரெட்டி பேசுகையில், தில்லியில் 25 ஆயிரம் பள்ளி குழந்தைகள் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். அதேவேளையில் போலீசார் இந்த விவகாரத்தில் கண்டும் காணாமல் உள்ளனர் என கூறினார்.
தில்லி மட்டுமின்றி வட இந்தியா முழுவதும் போதை பொருள் எளிதில் கிடைக்கிறது. ஒன்றுமறியாத குழந்தைகளின் வாழ்வை அது அழிக்கிறது. போதை பொருட்களுக்கு அடிமையானோரில் 83 சதவீதத்தினர் கல்வி அறிவுடையோர். ஆனால் மாபியா கும்பல் தலையீட்டால் இந்த விவகாரத்தினை மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதுகுறித்து ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தர்கண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் கள் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டனர் என்றார்.பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா நாடுகளின் வழியே இந்தியாவுக்குள் போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேசிய புலனாய்வு முகமையுடன் வேறு சில அமைப்புகளும் தங்களுக்குள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.