tamilnadu

img

அபிநந்தனை கைது செய்த  பாக்.வீரர் சுட்டுக்கொலை

புதுதில்லி:
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர் அகமது கான் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் அகமது கான் என்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.பாகிஸ்தான் எப்.16 விமானத்தை விரட்டிச் சென்று சுட்டுவீழ்த்திய அபிநந்தன் பயன்படுத்திய மிக் 21 ரக விமானமும் சுடப்பட்டதால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் காயத்துடன் விழுந்தார் அபிநந்தன். அப்போது அபி நந்தனை கைது செய்தவர் அகமது கான் என்று கூறப்படுகிறது.

;