புதுதில்லி, ஜூலை 6- ஆதார் திருத்தச் சட்டமுன்வடிவு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் ஒன்றாகும். எனவே இதனை எங்கள் கட்சியின் சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம் என்று மக்களவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வியாழன் அன்று 2019ஆம் ஆண்டு ஆதார் மற்றும் இதர சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பங் கேற்று உரைநிகழ்த்தும்போதே பி.ஆர். நட ராஜன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறி யதாவது: 2019ஆம் ஆண்டு ஆதார் மற்றும் இதர சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, ஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மீறுகின்ற ஒன்றாகும். இந்திய தரவு கள் மற்றும் அந்தரங்கங்களை எவர்வேண்டு மானாலும் பார்க்கக்கூடிய ஆபத்தை ஏற் படுத்தக்கூடியது. இந்தச் சட்டமுன்வடிவை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மை யின்மை, நாடாளுமன்றக் குழு எதனிட மும் கலந்தாலோசனை செய்யாமை முத லானவை அனைத்தும் வெளிப்படையாகவே தெரிகின்ற விடுபடுதல்களாகும். எனவே, எங்கள் கட்சியின் சார்பாக இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
கட்டாயப்படுத்துகின்றன
இந்தச்சட்டமுன்வடிவு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான ஒன்று. இது தொடர்பாக நம்முன் உள்ள பிரச்சனை இதில் உள்ள தரவுகள் ஒருவரின் மனமார்ந்த விருப்பத்தின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து அளிக்கப்படுபவைகளா (voluntary) அல் லது கட்டாயமாக அளிக்கப்பட வேண்டிய வைகளா (mandatory) என்பதாகும். அர சாங்கத்தின் கூற்றுப்படி இது மக்களால் தாமா கவே முன்வந்து அளிக்கப்படுபவைகளாகும். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி உட்பட அர சாங்கத்தின் அனைத்து அமைப்புகளும், இதில் உள்ள தரவுகள் கட்டாயமாக அளிக்கப் பட வேண்டியவை என்று வலியுறுத்துகின் றன. எனவேதான், இதனை உச்சநீதிமன்றத் தின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறுகிறோம்.
தனியார் நிறுவனங்களின் ஆதாயத்துக்காகவே!
இந்தச்சட்டமுன்வடிவில் காணப்படு கின்ற பிரச்சனைகளுக்குரிய சில பிரிவு களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். முதலாவதாக, ஆதார் சட்டமுன்வடிவின் 4ஆவது பிரிவின் 7ஆவது உட்பிரிவு மற்றும் இந்திய டெலிகிராப் சட்டத்தின் 4ஆவது பிரிவின் 24ஆவது உட்பிரிவு ஆகியவையும் மற்றும் 2002ஆம் ஆண்டு பண மோசடி தடைச்சட்டம் (Prevention of Money Launderi8ng Act) 11-A பிரிவின் 25ஆவது உட்பிரி வின்கீழ் புதியதொரு பிரிவு சேர்க்கப்பட்டி ருப்பதும் – ஆகிய இவை அனைத்தும் தனி யார் நிறுவனங்கள் ஆதாயம் அடைவ தற்காகவே கொண்டு வரப்பட்டிருப்பவை களாகும். எனவேதான் இதனை நாங்கள் எதிர்க்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவானது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறந்தள்ளி விட்டு, ஆதார் தரவுகளை தனியார் நிறு வனங்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வ தற்கு அனுமதிக்கிறது. இது முற்றிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாகும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் விதத்தில் இச்சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டிருப்பதானது அரசின் நோக்கத்தை நன்கு பிரதிபலிக்கிறது.
அந்தரங்கம் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை
அடுத்ததாக, குடிமக்களின் அந்தரங்கங் கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இச்சட்டமுன்வடிவு எதுவும் குறிப்பிட வில்லை. தனிப்பட்டவர்களின் சொந்தத் தரவு கள் பாதுகாப்புச் சட்டம் போன்று சிறப்புச் சட்டம் இருந்திட வேண்டும். அவ்வாறு எது வும் தற்போது இல்லை. இதுதொடர்பாக பொதுக் கலந்தாலோசனை எதுவும் முறை யாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வில்லை. எனவே இச்சட்டமுன்வடிவை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.
(ந.நி.)