புதுதில்லி, மே 2 -பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 942 இடங்களில் முக்கியக் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படைவீரர்கள் சென்ற வாகனம் ஐஇடி ரக குண்டு களால் மே 1 புதனன்று வெடிக்கச் செய்யப்பட்டது.இக்கொடூர சம்பவத்தில் 16 படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளால் நடத்தப்பட்ட இச்சம்ப வத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல்களும், கண்டனங் களும் வந்துள்ளன. பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “2014ஆம் ஆண்டிலிருந்து புல்வாமா, பதான்கோட், உரி, கட்சிரோலி உள்ளிட்ட பல முக்கியக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 942 முக்கியக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. பிரதமர் மோடி இவற்றை காது கொடுத்து கேட்க வேண்டும். கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5 ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட முக்கியக் குண்டுவெடிப்புச் சம்பவமோ அல்லது பெரிய தீவிரவாதத் தாக்குதலோ இந்த நாட்டில் நடைபெறவில்லை என்று கூறியிருந்ததைக் குறிப்பிட்டு இதை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.