tamilnadu

img

இன்று ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு பாதிப்பு... ஆந்திராவை தொடர்ந்து மிரட்டும் கொரோனா வைரஸ்.... 

அமராவதி
மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக புதிய கொரோனா மையமாக உருவெடுத்துள்ள ஆந்திராவில் தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 9 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

அங்கு மொத்த பாதிப்பு குறுகிய காலத்தில் 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 9,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,64.142 ஆக  உயர்ந்துள்ளது. இன்று (வியாழன்) ஒரே நாளில் 82 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து விடுதலையான நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,70,924 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 90,840 பேர் சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர  சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.  

;