நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் பங்கேற்ற ஆன்லைன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து நாளை உச்சநீதிமன்றத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், புதுச்சேரி, ஜார்கண்டு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய 7மாநில அரசுகள் வழக்கு தொடர முடிவுசெய்துள்ளன.
இந்நிலையில் நீட் ஜேஇஇ தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை இயக்குநர் வினித் ஜோஷி தெரிவித்துள்ளார்.