ஐசிஎம்ஆர் தகவல்
புதுதில்லி,ஜூன் 18- நாடு முழுவதும் 62.4 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,65,412 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் வியாழனன்று காலை நிலவரப்படி மொத்தம் 3,66,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 334 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,237 ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
புதனன்று வரை 62 லட்சத்து 49 ஆயிரத்து 668 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரத்து 412 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. கொரோனா அறிகுறி தொடர்பாக அதிக சாம்பிள்கள் பரிசோதனை செய்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்ட னைத் தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.