tamilnadu

img

பிஎன்பி வாடிக்கையாளர்கள் 61 பேரின் வங்கி கணக்கில் இருந்து 15 லட்சம் திருட்டு

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் 61 பேரின் வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் போலி பணப்பரிவர்த்தனை செய்து சுமார் 15 லட்சம் திருடப்பட்டுள்ளது.

டெல்லி வசந்த் விகாரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை வாடிக்கையாளர்களான 61 பேர் வங்கி கணக்கிலிருந்து 3 நாட்களில் ,14 லட்சத்து 97 ஆயிரத்து 769 ரூபாய் திருடப்பட்டது. இதுகுறித்து கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி வங்கி மேலாளருக்கு வந்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், 61 வாடிக்கையாளர்களின் பணமும் பல்வேறு ஏடிஎம்-களில் இருந்து திருடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கொள்ளையர்கள் ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம் மையங்களிலிருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியிருக்கலாம் அல்லது வங்கி மூலம் தகவல் கசிந்து இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


;