tamilnadu

img

கடந்த 6 மணிநேரத்தில் 6 ஆயிரம் பேருக்கு பாதிப்பு...  கொரோனாவால் திணறும் இந்தியா... 

தில்லி 
கடந்த 3 மாதங்களாக உயரும் தினசரி பாதிப்பு மூலம் உலகின் கொரோனா மையமாக உள்ள இந்தியா குறுகிய காலத்தில் பலத்த சேதாரத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு தலா 90 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பிரேசிலை பின்னுக்குத்தள்ளி 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்திய மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று புதிய உச்சமாக 6 மணிநேரத்தில் 6,083 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்பொழுதும் இந்தியா 8 மணிநேரத்திற்கு 4 ஆயிரம் அல்லது 5 ஆயிரம் கொரோனா பாதிப்புகளை தான் சந்திக்கும். ஆனால் இன்று வெறும் 6 மணிநேரத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளை சந்தித்து மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதன்மூலம்...

மொத்த கொரோனா பாதிப்பு  - 42.08 லட்சமாக உள்ளது. 

மொத்த பலி எண்ணிக்கை  - 71,711

குணம்  - 32.50 லட்சம் 

சிகிச்சை  - 8.86 லட்சம் 

;