tamilnadu

img

அக்டோபரில் 5.5 லட்சம் பேர் வேலையிழப்பு... இந்தியாவில் வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரிப்பு!

புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்கபாதிப்புகள் காரணமாக, கடந்த2020 மே மாதத்தில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது.

தளர்வுக்குப் பின், கடந்த நான்கு மாதங்களில், இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத்துறை படிப்படியாக வளர்ச்சி காணத் துவங்கியது. வேலைவாய்ப்பின்மையும் குறையத் துவங்கியது.இந்நிலையில், கடந்த அக்டோபரில், வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது.நவம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான தொழிலாளர் சந்தை குறித்தவாராந்திர ஆய்வை, சிஎம்ஐஇஎனப்படும் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring IndianEconomy - CMIE) வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர்மாதத்தில் 38 சதவிகிதமாக இருந்த நாட்டின் வேலைவாய்ப்பு விகிதம் அக்டோபரில் 37.8 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது. 

வேலைவாய்ப்பு மே மாதத்தில் 3.16 கோடியாகவும், ஜூன் மாதத்தில் 6.32 கோடியாகவும், ஜூலை மாதத்தில் 1.53 கோடியாகவும், 2020 செப்டம்பர் வரை உயர்வில் சென்றது. ஆனால், 2020 அக்டோபரில் நாட்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.பண்டிகைக் காலம் என்பதால் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் இந்த வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திரு கின்றனர் என்றும் கணக்குகள் வெளியாகி இருந்தன.ஆனால், 2020 அக்டோபரில் ஏற்கெனவே இருந்த 5 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் பறிபோய், அக் டோபர் மாத வேலைவாய்ப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஊரடங்கு காலத்துக்கு முன்பு தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 42 சதவிகிதத்துக்குக் குறையாமலேயே இருந்தது. ஆனால், இது அக்டோபர் மாதத்தில் 40 சதவிகிதத்துக்கு வந்துவிட்டது.