tamilnadu

img

இந்தியா v/s  பாகிஸ்தான் என ட்விட் செய்த  பாஜக வேட்பாளர் 48 மணிநேரம்  பிரச்சாரம் செய்ய தடை

இந்தியா v/s பாகிஸ்தான் என டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட பாஜக வேட்பாளருக்கு 48 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. 
டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கபில்மிஸ்ரா தற்போது பாஜக வேட்பாளராக  போட்டியிடுகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் (India Vs Pakistan) எனக்குறிப்பிட்டு டெல்லி தேர்தல் தேதியைக் குறிப்பிட்டிருந்தார்.
இவரது பதிவு மக்களிடையே பிரிவினையைத் தூண்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  இதையடுத்து அவரின் பதிவை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கும், கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கும் டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கபில் மிஸ்ரா பிரச்சாரம் செய்ய  48 மணி நேரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

;