tamilnadu

img

காஷ்மீரில் பனிமலை சரிந்து 4 வீரர்கள் பலி

ஸ்ரீநகர், டிச. 4- காஷ்மீர் எல்லைக்கோடு அருகே இரண்டு இடங்களில் பனிமலை சரிந்து விழுந்ததில் 4 ராணுவ வீர்கள் உயிரிழந்தனர். குப்வாரா மாவட்டம் தந்தர் பகுதியிலும் பந்திப்போரா மாவட்டம் குரேஸ் பிரிவிலும் பனிமலைகள் இடிந்து சரிந்தன. தந்தரில் நான்கு வீர்கள் பனிச்சரிவில் சிக்கினர். அதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். மூன்று வீரர்களின் சடலம் புதனன்று மீட்கப்பட்டன. குரேஸ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு வீரர்கள் சிக்கினர். இதில் ஒரு வீரரை உயிருடன் மீடக முடிந்தது. தொடர்ந்து நடந்த தேடுதலில் இரண்டாவது வீரரின் சடலம் கிடைத்துள்ளது.