tamilnadu

img

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு நாளை தூக்குத்தண்டனை

புதுதில்லி,மார்ச் 18- நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலை யில் அதற்கான ஒத்திகை புதனன்று நடை பெற்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி தில்லி யில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவர் 6 பேர் கொண்ட கும்ப லால்  பாலியல் வன்கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப் பட்ட அக்சய் குமார் சிங், பவன் குப்தா,  முகேஷ் சிங், வினய் சர்மா ஆகி யோருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களையும் அனுப்பினர். ஆனால் இவையனைத்தும் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. கருணை மனுக்களை குடியரசுத் தலை வர் நிராகரித்தார். தண்டனை தேதி குறிக் கப்பட்டும் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு விரைந்து தண்ட னை வழங்க வேண்டும் என்று கோரி நிர்பயாவின் தாயார் 7 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்.  குற்றவாளிகளுக் கான சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில்  சர்வதேச நீதி மன்றத்தை நாடினர். இதனிடையே குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20ஆம் தேதி தூக்குத் தண்டனை விதிக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனை நிறைவேற்றப்பட ஒரு நாளே உள்ள நிலையில்  மீரட் நகரைச் சேர்ந்த ஹேங்க்மேன்  பவன் ஜல்லத் தூக்கில்போடும் பணிக்காக செவ்வா யன்று திகார் சிறைக்கு வந்தார். இந்நிலையில் புதனன்று காலை குற்றவாளிகளைத் தூக்கில்போடு வதற்கான ஒத்திகை நடைபெற்றுள்ளது. இதன்மூலம் நாளை காலை 5.30  மணிக்கு நான்கு பேரையும் தூக்கில் போடுவது உறுதி என்று சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.