tamilnadu

img

எம்.பி.க்களின் ஓராண்டு ஊதியத்தில் 30சதவிகிதம் பிடித்தம்-  பிரகாஷ் ஜவடேகர்

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் கடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இன்று பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. 
 பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30 சதவிகிதம்   தொகை பிடித்தம் செய்யப்படும். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர்களும் தாமாக முன்வந்து ஊதிய பிடித்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ஏப்ரல் 1ம்  தேதி 2020ல் இருந்து இந்த ஊதியம் பிடித்தம் நடைமுறைக்கு வருகிறது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு  அதாவது 2020 - 21 மற்றும் 2021 - 22ம் ஆண்டுகளுக்கு எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாது. இந்த வகையில் சேமிக்கப்படும்  ரூ.7,900 கோடி பணம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.
நிதிச் சிக்கன நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.