tamilnadu

img

அயோத்தியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் பாபர் மசூதிக்கு இடம் ஒதுக்கீடு!

உ.பி. மாநில அமைச்சர் தகவல்

லக்னோ, பிப்.6- அயோத்தியில் சங்-பரிவாரங் களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி யை புதிதாக கட்டிக்கொள்ள, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உத்தரப் பிரதேச பாஜக அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலம், ராமர் கோயில் அமையவுள்ள இடத்தில் இருந்து- அதாவது அயோத்தி நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரம் தள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக உத்தரப்பிர தேச மாநில அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “அயோத்தியின் மாவட்ட தலைநகரில் இருந்து 18 கி.மீ தூரத்தில் லக்னோ - கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தன்னிப் பூர் கிராமத்தில் இந்த நிலம் உள் ளது. எனவே மசூதிக்கு எளிதில் வந்து செல்ல முடியும். இதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மொத்தம் 3 இடங்களை தேர்வு செய்தோம். அதில் ஒரு இடம் மத் திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட் டது. அந்த இடத்திற்கு நல்ல போக்குவரத்து வசதி உள்ளது. வகுப்புவாத பிரச்சனைகள் வராது. சட்ட - ஒழுங்கும் அங்கு சிறப்பாக உள்ளது” என்று தெரி வித்துள்ளார். உத்தரப்பிரதேச அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “14 கோசி பரிக்ரமா” இடம் அயோத்தி நக ருக்கு வெளியே அமைந்துள்ளது. அயோத்தியில் திருவிழாக்களின் போது 42 கிலோமீட்டர் தூரத் திற்கு பக்தர்கள் கூடுவார்கள் என்  பதால், பரிக்ரமா எல்லைகளுக்கு அப்பால் மசூதிக்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என்று சாமி யார்கள் கேட்டுக்கொண்டதாக வும், அதனை ஏற்றுத்தான் நக ருக்கு வெளியே இடம் ஒதுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.