tamilnadu

img

அரசு பங்களாவுடன் மாதம் ரூ.2 லட்சம் ஊதியம்

புதுதில்லி:
தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய 9 பேரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில், இணைச் செயலாளர்களாகநியமித்து மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.இவர்களுக்கு பங்களா, வாகன வசதியுடன், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் மாதத்துக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரைசம்பளமும் வழங்கப்பட உள்ளது.குடிமைப் பணித் தேர்வுகளில் (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ்) தேர்ச்சி பெற்றவர்களே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதி அடிப்படையில், மத்தியஅரசின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள் பதவிகளில் நியமிக்கப்படுவது வழக்கம்.அனுபவத்தின் அடிப்படையில், லேடரல் எண்ட்ரி (Lateral Entry) முறையிலும் இந்த நியமனங்கள் நடக்கும் என்றாலும், தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட மாட்டார் கள். 

வருமானவரித்துறை, கஸ்டம்ஸ், ரயில்வே, தொலைத்தொடர்பு, அஞ்சலகம் மற்றும் வணிகம் உட்பட 37 அரசுத் துறைகளில் பணியாற்றியஅனுபவம் கொண்டவர்களே தகுதி உயர்வு வழங்கப்பட்டு, அரசின் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு, ‘லேடரல் எண்ட்ரி’ முறையில், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம்(?) பெற்றவர்களையும், மத்திய அரசின் இணைச்செயலாளர்களாக நியமிக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. அப்போதே இதற்கு எதிர்ப்பும் எழுந்தது. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, அரசு உயரதிகாரிகளும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாஜகவுக்கு வேண்டியவர்களை, அனுபவசாலிகள் - அறிவாளிகள் என்று கூறி, அவர்களைக் கொல்லைப்புற வழியாக, அரசின் உயர்பதவிகளில் உட்கார வைக்கும் திட்டமாகவே இதுதெரிகிறது என்றும் குற்றம் சாட்டினர். ஆனால்,மோடி அரசு அவற்றைக் கண்டு கொள்ளவில்லை.நிதி ஆயோக் பரிந்துரை என்ற பெயரில், யுபிஎஸ்சி மூலம் தனியாரை நியமிப்பதற்கு அறிவிக்கைகளையும் வெளியிட்டது. 40 வயதுக்கும் மேற்பட்ட, குறைந்தது 15 ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி, துறை சார்ந்த அனுபவம் பெற்றவர்கள், ஐஏஎஸ் தகுதிநிலையிலான மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தது.இந்நிலையில், மத்திய வேளாண் துறையில் ககோலி கோஷ், விமானப் போக்குவரத்துத்துறையில் அமர் துபே, வணிகத்துறையில் அருண் கோயல், பொருளாதார விவகாரத்துறையில் ராஜீவ் சக்சேனா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் சுஜித் குமார் பாஜ்பாய், நிதிச்சேவைத் துறையில் சவுரவ் மிஸ்ரா, புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் தினேஷ் தயானந்த் ஜகதலே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பிரிவில் சுமன் பிரசாத் சிங், கப்பல்போக்குவரத்து துறையில் பூஷன் குமார் ஆகியோரை அரசு இணைச்செயலாளர்களாக நியமித்து, வெள்ளிக்கிழமையன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் நியமிக்கப்பட்ட இந்த 9 இணைச்செயலாளர்களும் அடுத்த 3 ஆண்டுகளுக்கோ அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பதவியில் இருப்பார்கள் என்று கூறப் பட்டுள்ளது.

;