ஓசூர் - தளி சாலையில் கர்ணூர், பூணப் பள்ளி, பேளகொண்டப்பள்ளி, உளி வீரணப் பள்ளி கலுகொண்டப் பள்ளி, மதகொண்டப் பள்ளிஆகிய ஊர்கள் உள்ளன. இச்சாலையில் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ், ஆவ்டெக், ஹேமா இஞ்சினியரிங், ஐஎன்இஎல், பிஃயம், ரியல் ஃபுட்ஸ், டிவிஎஸ், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், சுந்தரம் கிளைட்டன், ஹரிதாகிராமர், தனேஜா ஏரோஸ்பேஸ் ஆகிய கார்ப்பரேட் தொழிற்சாலைகளும் டியூரோ பிளக்ஸ், நேசனல் பிளைவுட்ஸ், உட்பட 5 வட மாநில பிளைவுட்ஸ் கம்பெனிகளும் மற்றும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு இஞ்சினியரிங் தொழிலகங்களும் உள்ளன.
போளகொண்டப்பள்ளி அருகில் ஒரே வளாகத்திற்குள் உள்ள டிவிஎஸ் குழு மங்களின் 3 கிளைகளிலும் 3 நேரங்களில் (சிஃப்ட்) சுமார் 6000 பேர் வேலை செய்கின்ற னர். இதில் மிகக் குறைந்த எண்ணிக்கை யில் அதிகாரிகளும், சுமார் 1000 பேர் வரை நிரந்தர தொழிலாளர்களும், மூன்று வருட ஒப்பந்தத்தில் தொழில் பழகுனர்கள் (அப்ரண் டிஸ்) சுமார் 4000 வட மாநில தினக்கூலி ஒப் பந்தந்த தொழிலாளர்களும் உள்ளனர். ஹரிதா கிராமர் 4 கிளைகளில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட தினக்கூலி வட மாநில தொழிலாளர்களும், ஆவ்டெக், ஐஎன்இஎல் தொழிற்சாலைகளில் 400க்கும் குறைவான நிரந்தர தொழிலாளர்களும் ஆயித்திற்கும் மேற்பட்ட தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்க ளும் வேலை செய்கிறார்கள்.
3 பிளைவுட் கம்பெனிகள் மற்றும் ஹேமா எஞ்சினியரிங் ஆலையில் நிரந்தர தொழிலா ளர்கள் மிக மிகக் குறைவாகவும் நூற்றுக் கணக்கில் ஒப்பந்த தொழிலாளர்களும் உள்ளனர். தனேஜா ஏரோஸ்பேஸ் (டால்) ல் தமிழ கத்தை சேர்ந்த தொழிலாளர்களே இல்லை என லாம். பிற மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் தான் உள்ளனர். இத்தொழிற்சாலைகளில் சொற்ப அளவில் உள்ள நிரந்தர தொழிலாளர்க ளுக்கு ஓய்வு, மற்றும் இறப்பு ஏற்படும் போதும் அதை ஈடு செய்வதற்கு கூட நிர்வாகம் நிரந்தர தொழிலாளர்களை எடுப்பதில்லை.
இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பி ருந்து தற்போது வரை வேலை செய்து வரும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அசாம், ஒடிசா, உத்திர பிர தேசம், பீகார், ஜார்கண்ட், குஜராத், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களை சிறு சிறு மேன்பவர் காண்ட்ராக் டர்கள், மற்றும் பல அவுட் சோர்சிங் கம்பெனி கள் மூலம் ஆலை நிர்வாகம் நிர்வகித்து வரு கிறது. இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் கூலி கொடுக்கிறார்களா?, நியாயமான கூலி கொடுக் கப்படுகிறதா? ஈ.எஸ்ஐ,பிஎஃப், நிரந்தரம், சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள்,அரசின் குறைந்தபட்ச கூலிச் சட்டம் (மாதம் 18 ஆயி ரம்) இவைகள் குறித்து தொழிற்சாலைகளின் நிர்வாகங்களோ, தொழிலாளர் நலத் துறையோ, அரசு உயரதிகாரிகளோ, ஒப்பந்த தாரர்களோ நினைத்துக் கூட பார்ப்பப்ப தில்லை.
பேளகொண்டப்பள்ளி ஈ.எஸ்ஐ மருத்துவ மனை ஊழியர் பற்றாகுறை, ஒரே மருத்துவரு டன் பெயருக்காக உள்ளது. இந்நிலையில் கம்பெனி நிர்வாகங்கள் 8 மணி நேர வேலைக்கு 500 ரூபாய், 400 ரூபாய் என கூலி கொடுத்தால் ஒப்பந்ததாரர்கள் 250 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே கூலியாக கொடுத்து 16 மணி நேரம் வரை வேலை வாங்கி வருவதாகவும், தொழிற் சாலை வளாகத்திற் குள்ளும், வெளியிலும் சிறைக் கொட்டடிகள் போல் தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி கூட இல்லாத சிறு சிறு அறைகளில் 8 பேர், 10 பேர் என தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறு கிறர்கள்.
ஐந்திற்கும் மேற்பட்ட வட மாநில முத லாளிகளின் பிளைவுட் மற்றும் 20க்கும் மேற்பட்ட சிறு, சிறு தொழிற் சாலைகளிலும் நிரந்தர தொழிலாள்கள் ஒருவர் கூட இல்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடை உத்தரவு திடீரென அமலுக்கு வந்து ஆலைகள் மூடப்பட்டது. நிர்வாகங்களும், ஒப்பந்ததாரர்க ளும் மார்ச் மாத கூலியை கூட இது வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொடுக்க வில்லை என்பதால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் அவதிப்படு கின்றனர்.
இந்நிலையில் போளகொண்டப்பள்ளி, உளி வீரணப்பள்ளி, பூணப்பள்ளி, கலு கொண்டப்பள்ளி, மற்றும் சில ஊர்களில் பொதுமக்கள் சார்பாக தினமும் இரு வேலை, ஒரு வேலை உணவு என நாலாயிரம் பேருக்கு உணவு தயார் செய்து வழங்கி வந்தனர்.அதை யும் முதல்வரின் உத்தரவு என கூறி அரசு அதிகாரிகள் தடுத்து விட்டனர். பேளகொண்டப் பள்ளியில் மட்டுமே தொடர்ந்து 1000 பேருக்கு உணவு வழங்கப் பட்டு வருகிறது. மீதமுள்ள வட மாநில கூலித் தொழிலாளர்கள் சாப்பாட்டிற்கு வழி இல்லா மல் பசி பட்டினியில் வாடி தினமும் காலையும் மாலையும் யாராவது உணவு போட மாட்டார் களா என சாலையில் அலைகின்றனர்.
இந்நிலைகளை நேரில் பார்வையிட்டு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், இருதயராஜ், சாம்ராஜ், வட்டச் செயலாளர் வெங்கடேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் நஞ்சுண்டன், பொருளாளர் பீட்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த பிரச்சனையில் தமிழக அரசு உட னடியாக தலையிட்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு சம்பளமும் முன்பணமும் வழங்க ஆலை நிர்வாகங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் திண்டாடி வரும் வெளி மாநில ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசே உணவும், உணவுப் பொருள்களும் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து நிரந்தம் செய்வதுடன் குறைந்தபட்ச கூலி (ரூ.18 ஆயிரம்) சட்டத்தை அமல்படுத்தி ஈஎஸ்ஐ, பிஎஃப், உட்பட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வழங்கும் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிபிஎம், சிபிஐடியு தலைவர்கள் வலி யுறுத்தி உள்ளனர்.
-ஒய். சந்திரன்