tamilnadu

img

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா மரணம் 1,092

புதுதில்லி, ஆக. 19- இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,092 பேர் மரணமடைந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை  52,889 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிக அளவாக ஒரே நாளில் மேலும்  64,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  27,67,274 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் மேலும் 1,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52,889 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 6,76,514 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும் 20,37,871 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  இந்தியாவில் இதுவரை  கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய 3,17,42,782 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளன. செவ்வாயன்று ஒருநாளில் மட்டும் 8,01,518 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.