tamilnadu

ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் திருக்குறள்-ஓவியப்போட்டி அறிவிப்பு

புதுச்சேரி, ஜூன் 19- ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கி யக் கழகம், வரும் ஜூலை 27  முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம்  மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளிடையே திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி யினை நடத்த உள்ளது. இப்போட்டிகள்  ஜூலை 28 அன்று புதுவை லாஸ்பேட்டை, கருவடிகுப்பம் ஃபாத்திமா மேல்நிலைப் பள்ளியில் நடை பெறுகிறது. இதேபோன்று சென்னை, மதுரை, நெல்லை, திரு வாரூர், திருச்சி, கோவை, ஈரோடு,  சேலம், வேலூர் ஆகிய நகரங்களி லும் முறையே ஜூலை 27 மற்றும்  ஆகஸ்ட் 3, 4, 10, 11,17, 18, 24, 25  ஆகிய தேதிகளில் நடைபெறு கிறது. இதில் பங்கு பெற விரும்பு வோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளிலோ அல்லது ஸ்ரீராம் சிட்ஸ், எண்: 1, அரவிந்தர் வீதி, செஞ்சி சாலை,  புதுச்சேரி - 605 001. தொலை பேசி: 0413 - 2223 123 / 2220 215 என்ற  முகவரியிலோ பெற்றுக் கொள்ள லாம். அல்லது www.shriram  chits.com என்ற இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வந்து சேர வேண்டிய கடைசித் தேதி, ஜூலை 20. இதில் கலந்துகொள்வோ ருக்கு இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும்.