டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி விளையாட நல்ல பயிற்சியில் தயாராக உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வடிவமைப்பபுகளை கற்றுக்கொண்டதாக இந்திய ஹாக்கி வீரர் கோத்தாஜித் கூறியுள்ளார். இந்தியா ஆண்கள் ஹாக்கி அணி கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சரியான நேரத்தில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் இந்திய அணி வலுவாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளுக்கான தேசிய முகாம்கள் ஆகஸ்ட் மாதம் இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் 45 நாள் இடைவெளியில் தொடங்கப்பட்டது. களத்திற்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு மாதங்களில் மேற்கொண்ட பயிற்சியில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளதாகவும், வரும் ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாட வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற பின்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் தேசிய அணிக்குத் திரும்பியுள்ளார் கோதாஜித். அணியில் இருந்து வெளியேறுவது ஒருபோதும் எளிதானது அல்ல. எனவே அணியில் எனது இடத்தை உறுதிப்படுத்த முடிந்தவரை கடினமாக உழைக்க நான் உறுதியாக இருக்கிறேன் . ஊரடங்கின் போது எனது விளையாட்டை முழுமையாக ஆராய்ந்தேன். நான் வேலை செய்ய வேண்டிய எனது விளையாட்டின் அம்சங்களை நான் அறிந்து கொண்டுள்ளேன். அடுத்த சில மாதங்கள் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானவை மற்றும் ஒலிம்பிக் ஒத்திவைக்கப்படுவதால், எங்கள் தனிப்பட்ட மற்றும் அணி விளையாட்டை வலுப்படுத்த எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.