tamilnadu

img

புனித பேட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

புதுச்சேரி, மே 3-புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாரதாம்பால் நகரில் உள்ள புனித பேட்ரிக் மேல்நிலை பள்ளியில் 275 மாணவர்கள் தேர்வு எழுத்தினார்கள். தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றனர். 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இம் மாணவர்களை பள்ளியின் இணை தாளாளர் ரெஜீஸ் ஜான் பிரிட்டோ, முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, முதன்மை அதிகாரி மார்ட்டின் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

;