திருவனந்தபுரம்,மே 29- கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதியன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் மே 31 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா மற்றும் தென் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம் தேதியன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய மேற்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஏமனை நோக்கி நகரும் என்பதால் மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.