tamilnadu

img

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை - முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் பேனர் வைப்பதற்கு தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை ரேடியல் சாலையின் நடுவே சட்டவிரோதமாக வைக்கப்பட்டு இருந்த பேனர் ஒன்று திடீரென சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபாஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி சாலையில் அப்பெண் விழுந்தபோது, பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய சுபாஸ்ரீ, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பேனர் கலாச்சாரத்தால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, புதுச்சேரியில் பேனர் வைப்பதற்கு தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
 

;