புதுச்சேரியில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில், கடந்த 2 வாரங்களாக கோவிட்-19 தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று 51 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 46 பேர், இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் ஒருவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.
இந்நிலையில், கொம்பாக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், அன்னை தெரேசா நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியானது. அதுபோல் சென்னையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கோவிட்-19 தொற்றால் மொத்தம் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனை 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, புதுச்சேரி சட்டமன்ற ஊழியர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் இன்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.