புதுச்சேரியில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கோவிட்-19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில், இன்று புதிதாக 8 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுவை மாநிலத்தில் 202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிள்ளைச்சாவடி, முருங்கப்பாக்கம், சேத்திலால் நகர், திலகர் நகர், தவளக்குப்பம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம், சண்முகாபுரம், தர்மாபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பிஆர்டிசி ஓட்டுநர் ஆவார். இந்த 8 பேருக்கும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில், 7 வயதுச் சிறுமியும் ஒருவர். ஒருவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்ற பிஆர்டிசி ஓட்டுநரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.