tamilnadu

img

புதுச்சேரி தோல் ஆலை நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு தர்ணா

புதுச்சேரி, பிப். 22- சேதராப்பட்டு சோலி பிசியோ தோல் தொழிற் சாலை நிர்வாகத்தின் தொழி லாளர் விரோத நடவடிக் கையை கண்டித்து சிஐடியு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சேதராப் பட்டில் கெம்கிரௌன் சோலி பிசியோ என்ற தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்து வரு கிறார்கள். இந்தத் தொழிலாளர்க ளுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வந்தது. குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வந்த தொழி லாளர்களுக்கு, ஊதிய ஒப்பந்தம் கடைசியாக சென்ற ஆண்டு மார்ச் 2019 ஆம் ஆண்டோடு முடிவடைந்  ததையொட்டி புதிய ஊதிய ஒப்பந்தம்  ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி னர். மேலும் ஊதிய ஒப்பந் தத்தை வலியுறுத்தி வந்த தொழிலாளர்கள் 5 பேரை  எந்த காரணமும் இன்றி தொழிற்சாலை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. தொழிற்சாலையின் இந்த அடாவடி தனத்தைக்  கண்டித்து புதுச்சேரி அரசின் தொழிலாளர் நலத்துறை யில் சிஐடியு புகார் அளித் தது. ஆனால் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தொழிற் சாலை நிர்வாகத்தின் அராஜகபோக்கை கண்டித்து, தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். சேதராப்பட்டு சோலி பிசியோ தொழிற்சாலை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சிஐடியு புதுச்சேரி பிரதேசத் தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் பிரபுராஜ், நிர்வாகிகள் ராஜ்குமார், மதிவாணன், மது, ரவிச்சந்திரன், ரவிக்குமார் உள்ளிடோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். செயலாளர் ஜி.சீனு வாசன் தர்ணாவை நிறைவு செய்தார். இதில் நிர்வாகிகள் ரமேஷ், பச்சைமுத்து உள்ளிட்ட ஏராளாமான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.