புதுச்சேரி, ஆக.30- புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையன்றும் அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை என்று புதுச்சேரி பிரதேச முதல்வர் நாராயணசாமி தெரி வித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: புதுச்சேரியில் பொதுமுடக்க கட்டுப்பாடு களில் தற்போதைய நடைமுறையே அம லில் இருக்கும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழ மையன்று அமல்படுத்தப்படும் முழு முடக் கம் இனி இல்லை. புதுச்சேரியில் பொது முடக்க கட்டுப்பாடுகளில் தற்போதைய நடைமுறையே அமலில் இருக்கும். மத்திய அரசு அறிவித்த நான்காம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்து நாளை (திங்கள்) முடிவு செய்யப்படும். மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அரசின் நடவடிக்கைகள் பயனளிப்ப தில்லை. வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் 32 பகுதிகள் தனிமைப்படுத் தப்படும் என்ற உத்தரவு மாற்றம். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெருக் களை தவிர மற்ற பகுதிகளை தனிமைப் படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.