புதுச்சேரியில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 31-அம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களை வரும் 31-ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, புதுச்சேரியிலும், வரும் மார்ச் 31-அம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.