tamilnadu

முக கவசங்களை அதிக விலைக்கு விற்ற மருந்தகங்கள்

புதுச்சேரி,மார்ச் 21- முக கவசங்களை அதிக விலைக்கு விற்ற புதுச்சேரி மருந்தகங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்க கூடாது என புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதையும் மீறி சில மருந்தகங்களில்  தொடர்ந்து அதிக விலைக்கு முக கவசம் விற்று வருவதாக புகார்கள் கூறப்பட்டது. இதனை யடுத்து புதுச்சேரி அதிகாரிகள் தனியார் மருத்தகங்களில்  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி தட்டாஞ்சாவடி விவிபி நகர், அம்பலத்தடையார் மடத்து வீதி மற்றும் பாரதி வீதியில் உள்ள பிரபல மருந்தககங்களில் முக கவசங்கள் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மருந்தகங்க ளில் 2883 முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட மருந்தகங்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது