tamilnadu

img

செப்.,14ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கேள்வி நேரமும், தனி நபர் தீர்மானமும் கிடையாது

கொரோனா நோய் தொற்றின் காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் தனித்தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான கொரோனா தொற்றுக்கு இடையில் செப்.,14 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரமும், தனி நபர் தீர்மானமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 லட்சத்தினை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைவெளியுடன் பங்கேற்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டம் துவங்கும் செப்.,14 மக்களவை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், அடுத்தடுத்த நாட்களில் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் அக்.,1 வரை நடைபெறுகிறது. மாநிலங்களவை துவக்க நாளில் மத்தியம் 3 மணி துவங்கி இரவு 7 மணி வரையும், பின்வரும் நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத் தொடரில் கேள்வி நேரமும், தனி நபர் மீதான தீர்மானமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.