tamilnadu

புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கு அசைவம்

புதுச்சேரி. ஆக.10- புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலை யில், கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. திங்களன்று (ஆக.10) புதிதாக 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,624ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ  உணவு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு  செலவிடும் தொகையை 300 ரூபாயாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது.