புதுச்சேரி திட்டக்குழு கூட்டத்தில் இருந்து முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் துவங்குகிறது. இதில், நடப்பு 2019-20ம் ஆண்டுக்கான, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் முதல்வர் நாராயணசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.மாநில திட்டக் குழு கூடி, புதுச்சேரி பட்ஜெட் தொகை தொடர்பாக விவாதித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். பட்ஜெட் தொகை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், அமைச்சரவையில் வைக்கப்பட்டு, மத்திய உள்துறையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும்.இதற்காக, மாநில திட்டக் குழுவின் கூட்டம் ஆளுநர் கிரண்பேடி தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது திட்டக்குழு கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளை அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்தார்.