tamilnadu

img

சமூக நல்லிணக்கத்திற்காக மோட்டார் சைக்கிள் பிரச்சாரம்

புதுச்சேரி, ஜன. 27- இந்திய அரசமைப்புச்சட்டத்தையும்,மதச்சார்பற்ற  தன்மையையும், ஜனநாயக சோஷலிசத்தையும், அதன்  அடிப்படை மாண்புகளையும் மக்கள் ஒற்றுமையை பாது காத்திடும் வகையில் குடிய ரசு தினத்தில் சமூக நல்லி ணக்கத்தை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் ஊர்வ லம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்  சாலை எதிரில் துவங்கிய ஊர்  வலத்திற்கு புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அரசு ஊழியர் சம்மேளன கவு ரவத் தலைவருமான சி.எச். பாலமோகனன் தலைமை  தாங்கினார். ஒருங்கி ணைப்பாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராமச்சந்திரன், அப்துல்ஹமீது, பஷீர் அஹமது, அந்தோணிசாமி அடிகளார், ஆலீஸ்தாமஸ், சிவ.வீரமணி, கொளஞ்சி யப்பன், ராதாகிருஷ்ணன், அப்துல்லா, அப்துல்பாஷா உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த  திரளானோர்  பங்கேற்றனர். இறுதியாக சாரம் ஜீவா னந்தம்சிலை எதிரே நடை பெற்ற நிறைவுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் பங் கேற்று வாழ்த்திப் பேசினார்.  முன்னதாக முதலி யார்பேட்டை, புதுவை  சப்தர்ஹஷ்மி கலைக் குழுவினரின்  பாடல்களுடன் அரியாங்குப்பம், பாகூர், ஏம்  பலம், வில்லியனூர், சுல்  தான்பேட்டை, முத்தியால் பேட்டை ஆகிய பகுதிகளில்  இப்பேரணி நடைபெற்றது.

;