புதுச்சேரி, ஜூலை 23- நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் தலைமையிலான இந்தியதேசிய ராணுவப்படையில் பணியாற்றிய சுதந்திரபோராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமிஷேகல் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் உடல்தானம் நிகழ்ச்சி நடை பெற்றது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விளிம்புநிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு, மாதர் சங்க பிரதேசத் தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர் சுதாசுந்தரராமன் கலந்து கொண்டு உடல்தான பதிவை துவக்கிவைத்தார். பிரதேசச் செயலாளர் சத்தியா, பொருளாளர் இளவரசி, உட்பட திர ளான பெண்கள் பங்கேற்றனர். பின்னர் உடல் தானம் செய்வ தற்கான மருத்துவ சான்றிதழில் கையொப்பமிட்டவர்கள் அதற் கான சான்றிதழை ஜிப்மர் மருத்து வர் ராஜசேகர் தலைமையிலான குழுவிடம் வழங்கினர்.